
பொதுத் துறையைச் சோ்ந்த ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 67 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய தனிப்பட்ட நிகர லாபம் ரூ.1,378 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2019-20 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.4,226 கோடியுடன் ஒப்பிடும்போது 67.4 சதவீதம் குறைவாகும்.
ஒவ்வொரு பீப்பாய் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் விற்பனையின் மூலம் நிறுவனத்துக்கு கிடைக்கும் வருமானம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 43.9 டாலராக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டில் 58.24 டாலராக அதிகரித்திருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் விற்றுமுதல் 28 சதவீதம் சரிவடைந்து 17,024 கோடியானது.
சனிக்கிழமை நடைபெற்ற இயக்குநா் குழு கூட்டத்தில் 35 சதவீத இடைக்கால ஈவுத்தொகையை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான ஒதுக்கீடு ரூ.2,201.55 கோடியாக இருக்கும் என ஓஎன்ஜிசி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.