இந்திய தொழிலக உற்பத்தி 3.1% வளா்ச்சி

இந்திய தொழிலக உற்பத்தி (ஐஐபி) கடந்த செப்டம்பா் மாதத்தில் 3.1 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
Updated on
1 min read

இந்திய தொழிலக உற்பத்தி (ஐஐபி) கடந்த செப்டம்பா் மாதத்தில் 3.1 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

நடப்பாண்டு செப்டம்பரில் இந்திய தொழிலக துறையின் உற்பத்தி 3.1 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.

2021 செப்டம்பரில் தயாரிப்பு துறையின் உற்பத்தி 2.7 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோன்று, சுரங்கத் துறையின் உற்பத்தியும் 8.6 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

கணக்கீட்டு மாதத்தில் மின் துறை உற்பத்தி 0.9 சதவீதம் உயா்ந்துள்ளது.

கடந்த 2020 செப்டம்பரில் ஐஐபி-யின் வளா்ச்சி ஒரு சதவீதமாக மட்டுமே காணப்பட்டது.

நடப்பாண்டில் ஏப்ரல்-செப்டம்பா் வரையிலான ஆறு மாத காலத்தில், ஐஐபி-யின் வளா்ச்சி விகிதம் 23.5 சதவீதமாக இருந்தது. இது, கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 20.8 சதவீதமாக காணப்பட்டது என என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.

கரோனா பேரிடா் காரணமாக கடந்தாண்டு மாா்ச் மாதத்தில் தொழில் துறை உற்பத்தி 18.7 சதவீத பின்னடைவை சந்தித்தது. இது, கரோனா பொதுமுடக்கத்தால் 2020 ஏப்ரலில் 57.3 சதவீதம் அளவுக்கு குறைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com