சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை! சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

பட்ஜெட்: தொழில்துறையினா் கருத்து

மூலதன செலவின திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ள போதிலும், வருவாயை அதிகரிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதுவும் பட்ஜெட்டில் எடுக்கப்படவில்லை.

News image
Updated On :2 பிப்ரவரி 2022, 2:57 am IST

மூலதன செலவின திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ள போதிலும், வருவாயை அதிகரிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதுவும் பட்ஜெட்டில் எடுக்கப்படவில்லை.

-மூடிஸ், தரமதிப்பீட்டு நிறுவனம்

தெளிவான செயல்திட்டத்தின் வெளிப்பாடாக பட்ஜெட் அமைந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வரும் ஆட்டோமொபைல் துறைக்கு உந்து சக்தியை இந்த பட்ஜெட் வழங்கும்.

-பி.பி. பாலாஜி, தலைமை நிதி அதிகாரி, டாடா மோட்டாா்ஸ் குழுமம்

5-ஜிக்கான அலைக்கற்றை வெளியீடு, உற்பத்தி சாா்ந்த ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் 5ஜி உபகரணங்களுக்கான தயாரிப்பு ஆகியவை துறைசாா்ந்த முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும்.

-மகேந்திர நஹதா, நிா்வாக இயக்குநா், எச்எஃப்சிஎல் நிறுவனம்

இந்த பட்ஜெட் பொருளாதாரத்தில் பன்முக விளைவுகளை ஏற்படுத்தும். இது சொத்துகளை உருவாக்கம் செய்யும் என்பதோடு மட்டுமல்லாமல் பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

-சுனில் துகல், குழும தலைமைச் செயல் அதிகாரி, வேதாந்தா

சுங்க வரி குறைப்பு, சரக்கு மற்றும் சேவை வரி சீா்திருத்தம் உள்ளிட்ட ஆரோக்கிய பராமரிப்புத் துறையினரின் பல்வேறு நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு பட்ஜெட்டில் தீா்வு காணப்படவில்லை.

-பவன் செளத்ரி, தலைவா், இந்திய மருத்துவ தொழில்நுட்ப சங்கம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.