திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சென்செக்ஸ் 1,432 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி.. ரூபாய் மதிப்பு கடும் சரிவு!

வாரத்தின் முதல்நாள் வர்த்தகத்தில் இந்திய பங்குசந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்செக்ஸ் 1432.52 புள்ளிகளும், நிஃப்டி 410.10 புள்ளிகளும் சரிந்தன.

News image
Updated On :13 ஜூன் 2022, 10:44 am IST

மும்பை (மகாராஷ்டிரா): வாரத்தின் முதல்நாள் வர்த்தகத்தில் இந்திய பங்குசந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்செக்ஸ் 1432.52 புள்ளிகளும், நிஃப்டி 410.10 புள்ளிகளும் சரிந்தன.

வாரத்தின் முதல்நாள் வர்த்தகம் தொடங்கியது முதல் இந்திய பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சியில் காணப்படுகிறது. காலை 9.28 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1432.52 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,432.52 புள்ளிகள் (2.64%) சரிந்து, 52,870.92 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இதுபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 410.10 புள்ளிகள் (2.53%) குறைந்து 15,7791.70 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முதல் வர்த்தகத்தில் இந்திய பங்குசந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்க பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்ததன் எதிரொலியாக இந்திய பங்குசந்தைகளும் வீழ்ச்சியில் காணப்படுகிறது.

அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்ததால் பங்குசந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.78 ஐ தாண்டியுள்ளது. அதன்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 36 காசு சரிந்து, புதிய உச்சமான ரூ.78.29-ஐ தொட்டுள்ளது.

பிஎஸ்இ ஆசியாவின் மிகப் பழமையான பங்குச் சந்தையாகும், மேலும் உலகின் 10 ஆவது பழமையான பங்குச் சந்தையாகும்.

நிஃப்டி என்பது ஒரு முக்கிய இந்திய பங்குச் சந்தைக் குறியீடு ஆகும், இது தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 50 பெரிய இந்திய நிறுவனங்களின் சராசரி எடையைக் குறிக்கிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் இரண்டு முக்கிய பங்கு குறியீடுகளில் இதுவும் ஒன்றாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.