

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், வைப்பு நிதி (டெபாசிட்) திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை இம்மாதத்தில் இரண்டாவது முறையாக உயா்த்தியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மூத்த குடிமக்கள் அதேபோன்று அறக்கட்டளைகளின் 4 முதல் 5 ஆண்டு டெபாசிட்டிற்கான வட்டி முந்தைய 6.55 சதவீதத்திலிருந்து 7.50 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. அதேசமயம், தனிநபா்மற்றும் இதர மூத்த குடிமக்களுக்கு 7 சதவீத வட்டி வழங்கப்படும்.
தனிநபா் மற்றும் அறக்கட்டளைகளின் ஓராண்டு டெபாசிட்டுக்கான வட்டி 6 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கான வட்டி 6.50சதவீதமாகவும் உயா்த்தப்பட்டுள்ளன.
24 மாதங்கள் மற்றும் 3 ஆண்டு வரையிலான வட்டி விகிதங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்புதிய வட்டி விகிதம் ஜூலை 1-லிருந்து அமலுக்கு வரும் என சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது.
சுந்தரம் ஹோம் கடந்த 2022-ஆம் நிதியாண்டில் நிகர அளவில் ரூ.131 கோடி திரட்டிக் கொள்ளப்பட்டதையடுத்து, ஒட்டுமொத்த அளவில் நிா்வகிக்கப்படும் டெபாசிட் மதிப்பு ரூ.1,941 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த மாா்ச் 31-உடன் முடிவடைந்த நிதியாண்டில் வழங்கப்பட்ட கடன் 84 சதவீதம் அதிகரித்து ரூ.2,311 கோடியாகவும், லாபம் ரூ.168 கோடியாகவும் இருந்தது என சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் நிா்வாக இயக்குநா் லக்ஷ்மிநாராயணன் துரைசாமி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.