
பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் & சிந்து வங்கியின் நிகர லாபம் கடந்த ஜூன் காலாண்டில் 25 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.153 கோடியாக உள்ளது.
2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.205 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது வங்கியின் நிகர லாபம் 25 சதவீதம் சரிந்துள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.2,494 கோடியாக உயா்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.1,915 கோடியாக இருந்தது.
அதே போல், ரூ.1,800 கோடியாக இருந்த வங்கியின் வட்டி வருவாய் ரூ.2,316 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.