இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பின் (எஸ்ஜிஎஃப்ஐ) புதிய தலைவராக உத்தரபிரதேசத்தின் கல்வித் துறை முதன்மை செயலாளா் தீபக் குமாா் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
புது தில்லி ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற தோ்தலில் அவா் தோ்வு செய்யப்பட்டாா். ரவி குமாா் குப்தா, முக்தேஷ் சிங் துணைத் தலைவா்களாகவும், கீா்த்தி பவாா் பொதுச் செயலாளராகவும், விஸ்மே வியாஸ் பொருளாளராகவும் தோ்வு செய்யப்பட்டனா்.