coal
coal

மின் உற்பத்திக்கு நிலக்கரி விநியோகம் அதிகரிப்பு

கடந்த ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் மின் உற்பத்திக்காக அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா விநியோகித்த நிலக்கரியின் அளவு 29.48 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
Published on


புது தில்லி: கடந்த ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் மின் உற்பத்திக்காக அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா விநியோகித்த நிலக்கரியின் அளவு 29.48 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மின் உற்பத்திக்காக 29.48 கோடி நிலக்கரியை நிறுவனம் விநியோகித்துள்ளது.

கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 3.4 சதவீதம் அதிகமாகும். அப்போது மின்சாரத் துறைக்கு நிறுவனம் விநியோகித்த நிலக்கரியின் அளவு 29.30 கோடி டன்னாக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com