தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மீண்டும் 80 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: கலக்கத்தில் மக்கள்!

சென்னையில் தங்கம் விலை மீண்டும் 80 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாவதால் மக்கள் அதிர்ச்சி..

News image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்தது - ANI

Updated On :8 செப்டம்பர் 2025, 9:42 am

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் 80 ஆயிரத்தைக் கடந்த நிலையில் மக்கள் அதிர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உச்சம் தொட்ட தங்கம் விலை

வாரத்தின் முதல் நாளான இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது தங்கம் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் விலை ரூ.35 குறைந்து ரூ.9,970-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.79,760-க்கும் விற்பனையானது.

ஆனால், வர்த்தகம் நிறைவுபெற உள்ள நிலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் 90 உயர்ந்து ரூ.10,060-க்கும், ஒரு சவரன் ரூ.720 உயர்ந்து ரூ.80,480-க்கு விற்கப்படுகிறது. இன்று காலை குறைந்திருந்த தங்கம் விலை, திடீரென மீண்டும் உயர்ந்துள்ளது.

போட்டிப்போடும் வெள்ளி

தங்கத்தோடு போட்டிப்போட்டுக் கொண்டு வெள்ளி விலையும் உயர்ந்து வருகின்றது. இன்று காலை ஒரு கிராம் ரூ.137-க்கு விற்பனையானது. பிற்பகலுக்கு மேல் ரூ. 3 உயர்ந்து ரூ.140-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,40,000-க்கும் விற்கப்படுகிறது.

ஏன் அதிகரிப்பு?

இந்தியா-அமெரிக்கா இடையே வரி உயர்வு உள்ளிட்ட சில காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலையும் உயர்ந்து வருவதாகத் தங்க மதிப்பீட்டாளர்கள் கூறியுள்ளனர். இனிவரும் நாள்களில் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருவது, திருமண வயதில் பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary

People are shocked as the price of gold jewelry in Chennai has once again crossed 80 thousand.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் 80 ஆயிரத்தைக் கடந்த நிலையில் மக்கள் அதிர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உச்சம் தொட்ட தங்கம் விலை

வாரத்தின் முதல் நாளான இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது தங்கம் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் விலை ரூ.35 குறைந்து ரூ.9,970-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.79,760-க்கும் விற்பனையானது.

ஆனால், வர்த்தகம் நிறைவுபெற உள்ள நிலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் 90 உயர்ந்து ரூ.10,060-க்கும், ஒரு சவரன் ரூ.720 உயர்ந்து ரூ.80,480-க்கு விற்கப்படுகிறது. இன்று காலை குறைந்திருந்த தங்கம் விலை, திடீரென மீண்டும் உயர்ந்துள்ளது.

போட்டிப்போடும் வெள்ளி

தங்கத்தோடு போட்டிப்போட்டுக் கொண்டு வெள்ளி விலையும் உயர்ந்து வருகின்றது. இன்று காலை ஒரு கிராம் ரூ.137-க்கு விற்பனையானது. பிற்பகலுக்கு மேல் ரூ. 3 உயர்ந்து ரூ.140-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,40,000-க்கும் விற்கப்படுகிறது.

ஏன் அதிகரிப்பு?

இந்தியா-அமெரிக்கா இடையே வரி உயர்வு உள்ளிட்ட சில காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலையும் உயர்ந்து வருவதாகத் தங்க மதிப்பீட்டாளர்கள் கூறியுள்ளனர். இனிவரும் நாள்களில் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருவது, திருமண வயதில் பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary

People are shocked as the price of gold jewelry in Chennai has once again crossed 80 thousand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.