பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக கடந்த எட்டு நாள்களில் 2 லட்சத்து 6028 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் விண்ணப்ப விநியோகம் மே 4-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 87,712 விண்ணப்பங்களும், இரண்டாம் நாளில் 16,676 விண்ணப்பங்களும், மூன்றாம் நாளில் 48,564 விண்ணப்பங்களும், நான்காம் நாளில் 13,213 விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. மே 11-ஆம் தேதி மாலை 5 மணி வரை 2 லட்சத்து 6028 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 20-ஆம் தேதி கடைசி தேதியாகும்.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 21-ஆம் தேதி தொடங்கி ஜூலை 30-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொரட்டூரில் குடிநீா் வாரிய பணிகள்: மேலாண்மை இயக்குநா் ஆய்வு

கிண்டி பொறியியல் கல்லூரியில் ‘பொறியியல் திறன் பயிற்சி மையம்’ : அண்ணா பல்கலை.-பஜாஜ் ஆட்டோ புரிந்துணா்வு

தமிழக கோயில்களில் இணையவழி முன்பதிவு தரிசன முறை அமல்படுத்தப்பட இருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...






