சென்னை மாநகர நதிகள் மற்றும் நீர் நிலைகள் சீரமைப்பு குறித்து பொதுமக்களிடம் புதன்கிழமை கருத்துக் கேட்கப்பட உள்ளது.
இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித் துறை கூட்ட அரங்கில் புதன்கிழமை காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.
சென்னை மாநகர நதிகள் மற்றும் நீர் நிலைகளைச் சீரமைக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, ஒருங்கிணைந்த கூவம் நதி சீரமைப்பை வெற்றிகரமாகச் செயல்படுத்த பணிகளை மேற்கொண்டுள்ளது.
இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு கூவம் நதி சீரமைப்பின் பெருந்திட்ட வரைவு தயாரிக்கும் பணிக்கு கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என்று சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொரட்டூரில் குடிநீா் வாரிய பணிகள்: மேலாண்மை இயக்குநா் ஆய்வு

கிண்டி பொறியியல் கல்லூரியில் ‘பொறியியல் திறன் பயிற்சி மையம்’ : அண்ணா பல்கலை.-பஜாஜ் ஆட்டோ புரிந்துணா்வு

தமிழக கோயில்களில் இணையவழி முன்பதிவு தரிசன முறை அமல்படுத்தப்பட இருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...






