நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சென்னை நகர நதிகள் சீரமைப்பு: மக்களிடம் இன்று கருத்துக் கேட்பு

சென்னை மாநகர நதிகள் மற்றும் நீர் நிலைகள் சீரமைப்பு குறித்து பொதுமக்களிடம் புதன்கிழமை கருத்துக் கேட்கப்பட உள்ளது.

Updated On :12 ஜூன் 2013, 4:21 am IST

சென்னை மாநகர நதிகள் மற்றும் நீர் நிலைகள் சீரமைப்பு குறித்து பொதுமக்களிடம் புதன்கிழமை கருத்துக் கேட்கப்பட உள்ளது.

இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித் துறை கூட்ட அரங்கில் புதன்கிழமை காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.

சென்னை மாநகர நதிகள் மற்றும் நீர் நிலைகளைச் சீரமைக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, ஒருங்கிணைந்த கூவம் நதி சீரமைப்பை வெற்றிகரமாகச் செயல்படுத்த பணிகளை மேற்கொண்டுள்ளது.

இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு கூவம் நதி சீரமைப்பின் பெருந்திட்ட வரைவு தயாரிக்கும் பணிக்கு கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என்று சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.