தமிழகத்தில் சித்த மருத்துவம்-ஆயுர்வேத மருத்துவம்-யுனானி மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை தொடங்கியது.
முதல் நாளில் 285 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
சென்னை அரும்பாக்கம், பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், நாகர்கோயிலில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, மதுரை திருமங்கலத்தில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கல்லூரிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பத்தைப் பெறலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.500. தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org-லிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதியாகும். ஆகஸ்ட் இரண்டாவது வாரம் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









