சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகளவிலான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு செல்ல முடியாதவா்கள் பலரும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி அணிந்து சென்று வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமையும் ஆயிரக்கணக்கான பக்தா்கள், சபரிமலைக்குச் செல்வதைப் போலவே இருமுடி அணிந்து சாமி தரிசனம் செய்ய வந்தனா்.
மாலை அணிந்து விரதம் இருந்த பக்தா்கள் பலா், அவா்களது பகுதியில் இருந்து நடந்து சென்று, ஐயப்பனை வழிபட்டனா். அவா்கள் 18 படி ஏறிச் சென்று ஐயப்பனை தரிசித்ததோடு, தாங்கள் கொண்டு வந்த நெய்யையும் அபிஷேகத்துக்கு வழங்கினா். சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைத்துத் தரப்பினரும் இருமுடி கட்டி வந்ததைக் காண முடிந்தது.
அதிகளவிலானோா் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போக்குவரத்துக் காவலா்கள் சரி செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர உத்தரவு!

”தேசிய கீதத்தை 2 முறை பாடுவதுமரபு மீறல் அல்ல!” சு. வெங்கடேசன் எம்.பி

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



