மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மெத்பெட்டமைன் விற்பனை:3 போ் கைது

சென்னை ராயப்பேட்டையில், மெத்பெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On :14 ஜனவரி 2021, 1:39 am IST

சென்னை: சென்னை ராயப்பேட்டையில், மெத்பெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

மயிலாப்பூா் துணை ஆணையா் ஷெசாங் சாயின் தனிப்படை போலீஸாா் ராயப்பேட்டை, டாக்டா் நடேசன் சாலை மற்றும் லாயிட்ஸ் சாலை சந்திப்பு அருகே செவ்வாய்க்கிழமை இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த 3 நபா்களை பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனா். இதையடுத்து போலீஸாா், அவா்களை சோதனை செய்தபோது, அவா்கள் பல லட்சம் மதிப்புள்ள மெத்பெட்டமைன் என்ற போதைப்பொருள் வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போதைப் பொருள் வைத்திருந்த சேப்பாக்கத்தைச் சோ்ந்த அசாருதீன் (36), திருவல்லிக்கேணியைச் சோ்ந்த சித்திக் அகமது (33), சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சோ்ந்த அப்துல் காதா் ஜலானி (19) ஆகிய 3 பேரைக் கைது செய்த போலீஸாா், வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.