மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

‘திருடா திருடா’விலிருந்து என்னை ஏன் நீக்கினார்கள்? ‘பாபநாசம்’ ஆனந்த் மகாதேவன் கேள்வி

அந்தப் படத்தில் முறையாக ஒப்பந்தமாகி, எனக்கான உடைகளும் தயாராகின.

News image
Updated On :7 ஜூலை 2015, 11:48 am

பாபநாசம் படத்தில் நடித்த ஆனந்த் மகாதேவனுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. இவர் கமலுடன் இணைந்து விஸ்வரூபம் 2 படத்திலும் நடித்துள்ளார்.

அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பாபநாசம் படத்துக்குப் பிறகு நான் அதிகத் தமிழ்ப் படங்களில் நடிப்பேனா என்று கேட்கிறார்கள். விஸ்வரூபம் 2  படத்தில் நான் நடித்துள்ளேன். அதில் என் நடிப்புத்திறமை நன்கு வெளிப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் 2 படத்தில் நடித்தபிறகு உத்தம வில்லனில் நடிக்க அழைத்தார் கமல். ஆனால் வேறொரு படத்தில் பிஸியாக இருந்ததால் அந்த வாய்ப்பை ஏற்கமுடியவில்லை. பாபநாசத்துக்கு அழைத்தபோதும் பிஸியாகத்தான் இருந்தேன். ஆனாலும் எனக்காக தேதிகளை அட்ஜஸ்ட் செய்துகொண்டதால் நடிக்கமுடிந்தது.

நான் முதலில் மணி ரத்னம் இயக்கிய திருடா திருடா படத்தில் நடிக்க அழைக்கப்பட்டேன். அந்தப் படத்தில் முறையாக ஒப்பந்தமாகி, எனக்கான உடைகளும் தயாராகின. ஆனால் கடைசி நேரத்தில் என் வேடத்தில் எஸ்.பி. பாலசுப்ரணியம் எப்படி நடித்தார் எனத் தெரியவில்லை. அதன்பிறகு நான் எப்போது மணி ரத்னத்தைப் பார்த்தாலும் நான் மோசமான நடிகனில்லை என்று அவருக்கு உத்தரவாதம் அளிப்பேன். பாபநாசம் படத்தில் நான் நடித்ததை அவர் பார்ப்பார் என எண்ணுகிறேன்.

கிளைமாக்ஸ் காட்சியில் கமல் முன்னால் நடித்தது என் நடிப்புத் திறமையை மேலும் மெருகேற்றியது. இருவருக்கும் ஒரே அலைவரிசை இருப்பதால் அந்தக் காட்சியில் இருவராலும் சிறப்பாக நடிக்கமுடிந்தது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.