25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

அருள்நிதி நடிக்கும் தேஜாவு - முதல் பார்வை போஸ்டர் வெளியீடு

அருள்நிதியின் பிறந்தநாளில் ( நேற்று ) அவருடைய அடுத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியிருக்கிறது. 

அருள்நிதி நடிக்கும் தேஜாவு - முதல் பார்வை போஸ்டர் வெளியீடு

Published On :28 ஜனவரி 2024, 9:14 am IST

அருள்நிதியின் பிறந்தநாளில் ( நேற்று ) அவருடைய அடுத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியிருக்கிறது. 

நடிகரும் தயாரிப்பாளருமான அருள்நிதி இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடித்துள்ள 'டைரி' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருந்த நிலையில் தன்னுடைய அடுத்த படத்திற்கான முதல் பார்வை போஸ்டரையும்  வெளியிட்டார் .  

அப்படத்திற்கு ' தேஜாவு ' எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.  த்ரில்லர் கதையாக உருவாகிவரும் ' தேஜாவு' படத்தை அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்குகிறார். மதுபாலா, ஸ்மிருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் உள்ளிட்ட பலர் அருள்நிதியுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக பி.ஜி.முத்தையா, இசையமைப்பாளராக ஜிப்ரான், எடிட்டராக அருள் சித்தார்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, தமன் ஆகியோர் இணைந்து 'தேஜாவு' படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார்கள். இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ளது. தெலுங்கில் அருள்நிதி கதாபாத்திரத்தில் நவீன் சந்திரா நடித்திருக்கிறார்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.