தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

நான் ஒரு சினிமாவைத் தாண்டி நடிப்பேன் என நினைத்ததே இல்லை: ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 13 வருடங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் விடியோ வெளியிட்டு உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:23 pm IST

நடிகை ஸ்ருதி ஹாசன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 13 வருடங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் விடியோ வெளியிட்டு உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளார். 

நடிகை ஸ்ருதி ஹாசன் சில நாட்களுக்கு முன்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் விடியோவைப் பகிர்ந்து பிசிஒஎஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிப்படையாக தெரிவித்திருந்தார். தற்போது இன்ஸ்டாகிராமில் நடிகை ஸ்ருதி ஹாசன் பேசியதாவது: 

அற்புதமான 13 வருடங்கள்- நான் ஒரு சினிமாவைத் தாண்டி நடிப்பேன் என நினைத்ததே இல்லை. நான் இதற்காகவும் பிறக்கவில்லை. நான் கற்றுக்கொள்ள விரும்பி சினிமாவை கற்றுக்கொண்டேன். சினிமாதான் என் வாழ்க்கையில்  மகிழ்ச்சிக்கு மிகப்பெரிய காரணம். உண்மையில் சினிமாதான் எனக்கு வாழ்க்கையை அளித்தது. அதற்காக நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.

இத்தனை வருடங்களாக நான் கற்றுக்கொண்டது ஏராளம். வெற்றி தோல்விகளின் போது எப்படி தைரியமாக இருக்க வேண்டும் எனவும் பெண்களைப் பற்றிய கதைகளை சொல்ல வேண்டுமெனவும் விரும்பினேன். எனக்கு கிடைத்த பாராட்டுகளுக்கும் அன்பிற்கும் மனார்ந்த நன்றி. 

சினிமா எனும் கலையின் மூலம் உங்களை மேலும் அன்பில் விழவைப்பதற்கு முயற்சி செய்வேன்.

பின்குறிப்பு: வித்தியாசமானவர்கள் வெளிப்படையாக வித்தியாசமானவர் ஆகவே இருக்க வேண்டும். அது இறுதியில் பலன் தரும்! இந்த 13 ஆண்டுகளுக்கு நன்றி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.