தான் குற்றமற்றவன் என நிரூபிக்கும்வரை படங்களை இயக்கப்போவதில்லை என விருதுபெற்ற மலையாள இயக்குநர் சனல்குமார் சசிதரன் தெரிவித்துள்ளார்.
45 வயதான மலையாள இயக்குநர் சனல்குமார் சசிதரன் 2014இல் தனது முதல் படத்தினை மக்களிடமிருந்து பணம் வசூலித்து இயக்கினார். 2015இல் ‘ஒழிவுதிவசத்தே களி’ எனும் படத்தினை எடுத்தார். இப்படத்தில் இரண்டாம் பகுதி முழுவதும் ஒரே ஷாட்டில் எடுத்து அசத்தியிருந்தார். இநதப் படம் கேரள அரசின் விருதினையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இவரது படங்கள் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. கலை ரீதியாக இவரது படங்கள் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவர் 2020இல் ‘கயாட்டம்’ எனும் படத்தினை இயக்கினார். இதில் மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இந்த படப்பிடிப்பில் நடிகை மஞ்சு வாரியாரிடம் ஒழுங்கீனமாக நடந்ததாக புகார் எழுந்தது. பின்பு அவரை காவல்துறை கைது செய்ததும் பெரும் பரப்பினை ஏற்படுத்தியது.

இந்த குற்றச்சாட்டுகள் எதுவுமே உண்மையானதில்லை என இயக்குநர் சனல்குமார் சசிதரன் ஆரம்பம் முதலே வாதிட்டு வருகிறார். இந்நிலையில் டோவினோ தாமஸ் நடித்த அவரது புதிய படம் ‘வழக்கு’ சவுத் சியோல் திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
நமது ‘வழக்கு’ திரப்படம் சவுத் சியோல் திரப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்படுள்ளது மகிழ்ச்சி தருகிறது. முதல் கோவிட்டுக்கு முன்பு இந்த திரைப்படத்தினை எடுத்தோம். 2021இல் படம் முடிவடைந்தாலும் பல்வேறு பிரச்சனைகளால் படம் வெளியாகவில்லை.
என மீதுள்ள குற்றத்தை போக்கி நான் நிரபராதியென நிரூபிக்கும்வரை படங்களை இயக்கப்போவதில்லை. நான் உண்மையை நம்புகிறேன். நான் தனிப்பட்ட வாழ்வில் குற்றமே செய்ததில்லை என சொல்லமாட்டேன். ஆனால் நான கலை ரீதியாக தூய்மையாமையானவன். எனக்கு வாழ்வில் ஒரே குறிக்கோள்தான். சினிமா இயக்குவது. சினிமா என்பது ஆன்மீகப் பயணம் போன்றது எனக்கு. ஆனால் இந்த புகாருடன் இதைத் தொடர விரும்பவில்லை. இந்த முடிவு கடினமானதாக இருந்தாலும் மாறப்போவதில்லை. இந்தப் பொய்யான வழக்கு என்னை முகத்தில் அறைந்திருக்கிறது. குறுகிய எண்ணத்துடன் என் மீது காழ்ப்புணர்ச்சியுடன் அளித்த கட்டுக்கதைதான் இந்த வழக்கு.
இதுவரை 7 படங்கள், ஒரு ஆவணப்படம், 3 குறுப்படம் எழுதியிருக்கிறேன். இனிமேல் படமே எடுக்கமுடியாமல் இறந்தாலும் கவலையில்லை. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன். அதவரை படங்களை இயக்கமாட்டேன். இதுவரை என்னுடைய படத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. எல்லோரையும் நேசிக்கிறேன்.
Related Article
கேஜிஎஃப்-ல் நடைபெற்ற உண்மை சம்பவம் - விக்ரமுடன் இணையும் படம் குறித்து பா.ரஞ்சித் அதிரடி
வெளியானது தனுஷ் - அனிருத் கூட்டணியின் திருச்சிற்றம்பலம் 2வது பாடல் - ''மேகம் கருக்காதா...''
மனைவியாக இருக்க மாதம் ரூ.25 லட்சம் - நடிகையிடம் பேரம் பேசிய தொழிலதிபர் - அதிர்ச்சி சம்பவம்
பார்த்திபனின் 'இரவின் நிழல்' - படம் எப்படி இருக்கிறது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆப்கனில் நிலநடுக்கம்! ஜம்மு - காஷ்மீர், தில்லி வரை உணரப்பட்ட அதிர்வு!

டி20 உலகக் கோப்பை: அயர்லாந்துக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

லண்டனில் தெலங்கானா மாணவர் சடலமாக மீட்பு: உடலை தாயகம் கொண்டுவர குடும்பத்தினர் கோரிக்கை!






