இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

மனைவியாக இருக்க மாதம் ரூ.25 லட்சம் - நடிகையிடம் பேரம் பேசிய தொழிலதிபர் - அதிர்ச்சி சம்பவம்

மனைவியாக நடிக்க ரூ.25 லட்சம் சம்பளம் தருவதாக தொழிலதிபர் பேரம் பேசியதாக நடிகை நீது சந்திரா தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:18 pm IST

மனைவியாக நடிக்க ரூ.25 லட்சம் சம்பளம் தருவதாக தொழிலதிபர் பேரம் பேசியதாக நடிகை நீது சந்திரா தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை, ஜெயம் ரவியுடன் ஆதி - பகவன் படங்களில் நடித்தவர் நீது சந்திரா. மாதவனுடன் இணைந்து இவர் நடித்த யாவரும் நலம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நீது சந்திரா ஒரு பேட்டியில் ஒரு தொழிலதிபர் தன்னிடம் மனைவியாக இருக்க ரூ.25 லட்சம் தருவதாக தெரிவித்ததார் என கூறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும் நான் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தும் வாய்ப்பில்லாமல் இருக்கிறேன் என்றும் எந்த இயக்குநரும் என்னைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தன்னிடம் பேரம் பேசிய தொழில் அதிபர் யார் என்பதை நீது சந்திரா தெரிவிக்க மறுத்துவிட்டார். 

நெவர் பேக் டவுன் என்ற ஆங்கிலப் படத்தில் நடித்துள்ள நீது சந்திரா, இரண்டு படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யுத்தம் செய் படத்தில் அமீருடன் இணைந்து இவர் நடனமாடிய கன்னி தீவு பொண்ணா பாடல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.