பாலிவுட் நடிகர் சல்மானுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டலை தொடர்ந்து, அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் பாடகர் சித்து மூஸே வாலாவை கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள லாரன்ஸ் பிஸ்னொயின் கும்பலால், கடந்த ஜூலை மாதம் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மும்பை காவல்துறையால் ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்க மகாராஷ்டிர உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதையும் படிக்க | மீண்டும் இயக்குநராகும் தனுஷ்?
இதன்மூலம், சல்மான் கானுக்கு ஒரு பாதுகாப்பு அதிகாரி மற்றும் கமாண்டோக்கள் உள்பட 11 ஆயுதம் ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு அளிக்கவுள்ளனர்.
அதேபோல், கொலை மிரட்டல் காரணமாக அக்ஷய்குமார் மற்றும் அனுபம் கெர் ஆகியோருக்கும் ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.