நடிகர் தனுஷ் மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படம் வருகிற டிச.2 ஆம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது. தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
இந்நிலையில், நடிகர் தனுஷ் இப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்ததும் மீண்டும் இயக்குநராக புதிய படத்தினை இயக்குவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, தனுஷ் பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.