இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:13 pm IST

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்திற்கான வேலைகளில் மும்முரமாகியுள்ளார். 

மாஸ்டர், விக்ரம், ஆகிய படங்களிலும் ரத்ன குமார் திரைக்கதை எழுதினார். அந்த திரைப்படங்கள் பெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, தற்போது தளபதி 67 திரைப்படத்திலும் திரைக்கதையாசிரியராக ரத்ன குமார் பணியாற்றுகிறார்.

மேலும், தளபதி 67 படத்தின் அப்டேட்டுகளை அடுத்தடுத்து இயக்குநர் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் ட்விட்டரில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

முன்னதாக, இப்படத்தில் இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ மேனன் உள்ளிட்டோர் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இன்னொரு வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்.

நிவின் பாலி

நிவின் பாலி

இந்நிலையில், படத்தின் முக்கிய வில்லனாக நடிக்க முதலில் மலையாள நடிகர் ப்ரித்விராஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், படப்பிடிப்பு தேதிகள் காரணமாக அப்படத்திலிருந்து அவர் விலகினார். இந்நிலையில், அக்கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் நிவின் பாலியிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிவின் பாலி தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல், ஏழு மலை’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.