
சின்னத்திரை நடிகை செளந்தர்யா ரெட்டி ஐஸ்கிரீமுக்காக கவிதை எழுதி அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஐஸ்கிரீம் விரும்பியான செளந்தர்யா, அதனை ரசித்து சுவைக்கும் புகைப்படங்களையும் உடன் பகிர்ந்துள்ளார்.
சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் செளந்தர்யாவின் ரசிகர்கள் அந்த புகைப்படங்கள் குறித்தும் கவிதை குறித்தும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நாயகியாக நடிப்பவர் நடிகை செளந்தர்யா ரெட்டி. அவருக்கு ஜோடியாக நடிகர் ஆர்யன் நடித்து வருகிறார்.
கணவனால் ஏமாற்றப்பட்ட மீனாட்சி (தாய்), தனது 4 மகள்களையும் வளர்த்து சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ்வைக்கப் போராடுகிறார். அதற்கு 4 மகள்களும் துணைபுரிந்து பல சவால்களை எதிர்கொள்கின்றனர். இதுவே மீனாட்சி பொண்ணுங்க தொடரின் மையக்கதை.
இந்தத் தொடரில் இரண்டாவது மகளாக வரும் சக்தி பாத்திரத்தில் நடிகை செளந்தர்யா ரெட்டி நடித்து வருகிறார். கன்னட தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் நடித்த தெலுங்கு மொழித் தொடர் மிகப்பெரிய வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது.
தற்போது தமிழில் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதனால் தெலுங்கிலும் தமிழிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம்.
தனது ரசிகர்ளுடன் கலந்துரையாடும் வகையில், சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது இவரின் வழக்கம். தற்போது ஐஸ்கிரீம் உண்ணும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இவர் இதற்கு முன்பும் ஐஸ்கிரீமை சுவைக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளார்.
ஐஸ்கீரீம்கள் மீது தீராத பிரியம் கொண்ட செளந்தர்யா, ஐஸ்கிரீமுக்கு கவிதை ஒன்றையும் எழுதி பதிவிட்டுள்ளார். அதில், 2 ''என்னாளும் உன் ஞாபகம். பேச வார்த்தை இல்லை. காண கண்கள் இல்லை. கவிதை சொல்ல மொழி இல்லை'' எனப் பதிவிட்டுள்ளார்.
பெங்களூருவில் பிறந்திருந்தாலும், தெலுங்கு தொடர்களில் நடித்திருந்தாலும், தமிழில் கவிதை எழுதி பதிவிட்டுள்ளார் செளந்தர்யா. தமிழ் ரசிகர்கள் மீதுள்ள அன்பையே இது வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.