மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடிகர் ஜெயம் ரவி இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்த்துக்குப் பின் ஜெயம் ரவியின் இறைவன் படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.
தொடர்ந்து, அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் எழுதி இயக்கிய 'சைரன்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை புரிந்த ஜெயம் ரவி, சைரன் படத்தின் வெற்றிக்காக சாமி தரிசனம் மேற்கொண்டார்.
தொடர்ந்து, அங்கிருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.