மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

குட் பேட் அக்லி முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

குட் பேட் அக்லி முதல்நாள் வசூல் எவ்வளவு என்பதைப் பற்றி..

News image

குட் பேட் அக்லி..

Updated On :11 ஏப்ரல் 2025, 7:32 pm IST

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள படம் 'குட் பேட் அக்லி' நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, பிரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். குட் பேட் அக்லி படம் உலகம் முழுவதும் நேற்று வெளியான நிலையில், திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம் அலைமோதியது.

படம் வெளியாவதையொட்டி நேற்றுமுன்தினம் இரவு முதலே திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ள 'குட் பேட் அக்லி' படத்தின் முதல் நாள் வசூல் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, குட் பேட் அக்லி முதல் நாளில் ரூ.30.9 கோடி வசூலித்துள்ளது. வலிமை படம் முதல் நாளில் ரூ. 28 கோடி வசூலித்திருந்தது. இப்போது அதை முறியடித்துள்ள குட் பேட் அக்லி படம், வாரயிறுதியான சனி, ஞாயிறு மற்றும் தமிழ் வருடப்பிறப்பு ஆகிய தொடர் விடுமுறை காரணமாக நல்ல வசூலைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.