ராஜ்கிரண் நடித்த ப.பாண்டி படத்தை இயக்கிய நடிகர் தனுஷ், தான் இயக்கும் அடுத்தப் படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
ட்விட்டரில் அவர் கூறியதாவது:
நான் அடுத்து இயக்கும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நான் அதில் கதாநாயகனாகவும் நடிக்கிறேன். எனது 37-வது படம் குறித்து அடுத்த வருடம் நிறைய சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.