நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

'கபாலி'யால் மூன்றரை கோடி ரூபாய் நஷ்டம்: சேலம் விநியோகஸ்தர் பரபரப்பு குற்றச்சாட்டு!

தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்களையும் மக்களையும் தவறான வசூல் கணக்கைச் சொல்லி ஏமாற்றக்கூடாது... 

News image
Updated On :28 பிப்ரவரி 2017, 12:17 pm IST

சமீபத்தில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன், தமிழ் சினிமாவின் வணிக நிலவரம், லாப நஷ்ட கணக்குகள் பற்றி ஆடியோ வடிவில் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் கபாலி படம் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக குற்றம் சுமத்தினார். இதைத் தயாரிப்பாளர் தாணு மறுத்தார்.

இந்நிலையில் கபாலி படத்தை சேலத்தில் வெளியிட்ட விநியோகஸ்தர் நந்தா, ஆடியோ வடிவில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மினிமம் கியாரண்டி நடைமுறையில் சேலம் பகுதிக்கான கபாலி விநியோக உரிமையை ரூ. 6.4 கோடிக்கு வாங்கினேன். இன்னும் க்யூப் செலவுகள் எல்லாம் போக மொத்தம் எனக்கு ரூ. 7 கோடி ஆனது. ஆனால் எனக்கு பட வசூலில் இருந்து ரூ. 3.40 கோடிதான் கிடைத்தது. மொத்தமாக  எனக்கு ரூ. 3.60 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

கபாலி தயாரிப்பு நிறுவனத்திடம் இதுகுறித்து முறையிட்டேன். ஆனால் அவர்களிடமிருந்து முறையான பதில் வரவில்லை. தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்களையும் மக்களையும் தவறான வசூல் கணக்கைச் சொல்லி ஏமாற்றக்கூடாது. ஏனெனில் இது சினிமா வியாபாரத்தையே அழித்துவிடும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.