விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறியுள்ளார்கள். இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதையடுத்து சமந்தா - நாக சைதன்யா ஆகிய இருவருக்கும் அக்டோபர் 6 அன்று கோவா-வில் திருமணம் நடைபெறவுள்ளது.
இதுபற்றி ஆங்கிலப் பத்திரிகையில் அளித்த பேட்டியில் சமந்தா கூறியதாவது:
ஆமாம். அக்டோபர் 6-ம் தேதி எங்களுடைய திருமணம் நடைபெறவுள்ளது. திருமணம் ஹைதராபாத்தில் நடைபெறவில்லை. கோவா-வில் நடைபெறுகிறது. நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே அதில் கலந்துகொள்ளவுள்ளார்கள். இது நடுத்தரக் குடும்பத்தின் திருமணம். செய்திகளில் வெளியிட்டதுபோல விமரிசையாக எல்லாம் நடைபெறாது.
அடுத்த மூன்று நாள்களில் இருவரும் மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பவேண்டும். எனவே இப்போதைக்கு தேனிலவு குறித்து எதுவும் திட்டமிடவில்லை என்று கூறியுள்ளார்.
சமந்தா தற்போது ஏழு படங்களில் நடித்துவருகிறார். பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் படத்தில் நடித்துமுடித்த பிறகு தாற்காலிகமாக நடிப்பிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இது தெரியுமா? தலைகீழாக மரம் வளருமா?

இந்த வார ஓடிடி படங்கள்!

ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


