நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கேளிக்கை வரி விவகாரம்: முதல்வருடன் ஆலோசித்த பிறகே முடிவு!

கேளிக்கை வரி ரத்து தொடர்பாக முதல்வர் மற்றும், அமைச்சர்களுடன் பேசி முடிவு எடுக்கப்படும்... 

News image
Updated On :24 ஜூலை 2017, 4:16 pm IST

திரையரங்குகளுக்கான கேளிக்கை வரி தொடர்பான பேச்சு வார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. 

சினிமா டிக்கெட் கட்டணத்தில் ஜிஎஸ் டி}யுடன் கூடுதலாக விதிக்கப்பட்ட 30 சதவித கேளிக்கை வரி தொடர்பாக தமிழக அரசு நியமித்துள்ள குழுவுக்கும், திரையுலக அமைப்பைச் சேர்ந்த குழுவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

இதுதொடர்பான முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் உள்துறை செயலாளர்கள் மற்றும் தொழில்துறை செயலாளர்கள் இதில் பங்கேற்றனர். தமிழ் திரையுலகினர் சார்பில் தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் பெப்ஸி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பங்கேற்றனர். இதேபோல இன்றும் கேளிக்கை வரி தொடர்பான கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு தனது இறுதி முடிவை அறிவிக்கும் எனத் தெரிகிறது என்று விஷால் முன்பு பேட்டியளித்தார்.

ஆனால் இந்தக் கூட்டத்தின் முடிவிலும் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. 

கேளிக்கை வரி ரத்து தொடர்பாக முதல்வர் மற்றும், அமைச்சர்களுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதாக அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.