சர்வதேச திரைப்பட விழாவில் ஒரு கிடாயின் கருணை மனு!

நியூயார்க் நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் ஈரோஸ் நிறுவனம் தயாரித்த
சர்வதேச திரைப்பட விழாவில் ஒரு கிடாயின் கருணை மனு!
Published on
Updated on
1 min read

நியூயார்க் நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் ஈரோஸ் நிறுவனம் தயாரித்த, விதார்த் நடித்த, புதிய இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கிய 'ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படத்துக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை பார்த்த இந்திய வம்ச வழியினர் இந்தப் படம் இந்திய திரைப்பட துறைக்கு சர்வதேச அளவில் நல்ல பெயர் ஈட்டி தரும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

நமது மண்ணின் பெருமையையும், குணத்தையும் சார்ந்த ’ஒரு கிடாயின் கருணை மனு’ தமிழர்களுக்கு உலக அளவில் பெருமை சேர்க்கும் என படத்தை பார்த்த சர்வதேச படக் குழுவினரும் தெரிவித்தனர். படப்பிடிப்பு குழுவினரை பாராட்டிய விழாக் குழுவினர் 'இத்தகைய நேர்த்தியும், கள்ளம் கபடம் இல்லாத நகைச்சுவையும் தமிழக ரசிகர்களை மட்டுமின்றி எல்லோரையும் கவர்ந்துவிடும் ’ என பெருமையுடன் கூறினார் ஈரோஸ் சவுத் நிறுவனத்தை சார்ந்த சாகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com