கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ரஜினி படத்தின் கதை யாரை பற்றியது? தயாரிப்பு தரப்பு விளக்கம்!

பா.இரஞ்சித் இயக்கத்தில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் கதை யாரை பற்றியது என்று ...

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:31 pm

DIN

சென்னை: பா.இரஞ்சித் இயக்கத்தில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் கதை யாரை பற்றியது என்று அந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் பா.ரஞ்சித்-ரஜினிகாந்த் கூட்டணி இணையும் படத்தை ரஜினியின் மருமகனான நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் கதையானது மும்பையில் வாழ்ந்து மறைந்த பிரபல தாதா ஹாஜி மஸ்தான் பற்றியது என்று பேச்சு கிளம்பியது.

இந்நிலையில் ஹாஜி மஸ்தானின் மகனான சேகர் நேற்று முன்தினம் ரஜினிக்கு எழுதிய கடிதத்தில் இந்த படத்தில் தனது தந்தையை தவறாக சித்தரிக்க கூடாது என்று கேட்டுக் கொண்டிருந்தார். இதன் காரணமாக மீண்டும் புதிய சர்ச்சை உருவானது.

இந்நிலையில் படத்தின் கதை யாரை பற்றியது என்று அந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த படத்தின் கதையானது ஹாஜி மஸ்தான் கதை கிடையாது. மேலும் யாருடைய வாழ்க்கை வரலாறோ, நிஜ சம்பவங்களை கொண்ட கதையோ அல்ல. மும்பை பின்னணியில் நிகழும் ஒரு கற்பனை கதையாகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.