பிரபல ஹாலிவுட் நடிகையாக இருந்தாலும் இந்தியாவுக்கு வந்தால் என்ன நடக்கும்?
பிரபல ஹாலிவுட் நடிகை ஹாலே பெர்ரி கடந்த 8-ம் தேதி கேரளாவுக்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்துள்ளார். சிகிச்சை முடிந்த பின்னர் தனது நான்கு நண்பர்களுடன் ஆழப்புழா உள்ளிட்ட கேரளாவின் சில ஊர்களுக்கு சுற்றுலா சென்றார். அதன் பின் மும்பைக்கு பறந்தார்.
கடற்கரை முதல் கோவில்கள் வரை அங்கும் பல இடங்களுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதில் அவரது நண்பர், ‘உங்களை அச்சுறுத்துவதற்காகச் சொல்லவில்லை. எதற்கும் கவனமாக இருக்கவும். இந்தியாவில் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துவதுடன் கொன்றும் விடுவார்கள். கவனமாக இருங்கள்’ என்று அறிவுரை கூறினார்.
இதனால் தனது நிகழ்ச்சி நிரலை ஒருவருக்கும் சொல்லாமல் ஹாலே பெர்ரி தனது பயணத்தை ரகசியமாகவே வைத்திருக்கிறார். எங்கு ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டார் என்பதையும், எதற்காக சிகிச்சையை மேற்கொண்டார் என்பதைப் பற்றியும் பெர்ரி ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை.
எக்ஸ்-மென், டை அனதர் டே, மான்ஸ்டர்’ஸ் பால், ரோபோ, டார்க் டைட் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் ஹாலே பெர்ரி. மாஸ்டர்’ஸ் பால் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2002-ம் ஆண்டில் ஆஸ்கர் விருதை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

