சிவாஜி பேரன் துஷ்யந்த் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் விஷ்ணு விஷால்.
எழில் இயக்கும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு இசை - இமான். யோகி பாபுவும் இதில் நடிப்பதால் எழில் இயக்கத்தில் உருவாகும் மற்றொரு நகைச்சுவை படம் என்று அறியப்படுகிறது.
எழில் இயக்கத்தில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் கதாநாயகனாக நடித்தார் விஷ்ணு விஷால். இதன்பிறகு எழில் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சரவணன் இருக்க பயமேன் படத்துக்குப் பிறகு இப்படத்தை இயக்குகிறார் எழில்.
சிவாஜியின் பேரனும் ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் துஷ்யந்த் தயாரிக்கும் இரண்டாவது படம் இது. சக்ஸஸ், மச்சி போன்ற படங்கள் நடித்து பிறகு தயாரிப்பாளரான துஷ்யந்த் - பிரபு, காளிதாஸ் ஜெயராம் நடித்த மீன் குழம்பும் மண் பானையும் என்கிற படத்தை இதற்கு முன்பு தயாரித்தார்.