பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கூவக் கூவ... இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் மற்றுமொரு கொலைவெறிப் பாட்டு!

தமிழில் கூகை என்றால் ஆந்தை என்று பொருள். அதை பேச்சு வழக்கில் சொல்லும் போது கூட ‘கூக’ என்று சொல்வார்களே தவிர ‘கூவ’ என்று சொல்லக் கேள்வி இல்லை.

Published On :

கூவக் கூவ... முட்டாக் கூவ ஆக்கங்கெட்ட கூவ... இது வசை இல்லை பாட்டுங்க பாட்டு!

“ஒண்டி மனசச் சாத்தி - ஒரு
கொண்டிப் பூட்டப் பூட்டி
தொறவா தூக்கிப் போட்டு - அட
பொறவா தேடிப் போற...”

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒன்றாக ஒரிஜினல்ஸ் கம்பெனி பேனரில் வெளிவந்துள்ள இந்தப் பாடலின் நடன இயக்குனர் சதிஷ்.

Story image

தமிழில் கூகை என்றால் ஆந்தை என்று பொருள். அதை பேச்சு வழக்கில் சொல்லும் போது கூட ‘கூக’ என்று சொல்வார்களே தவிர ‘கூவ’ என்று சொல்லக் கேள்வி இல்லை. வட்டார மொழிவழக்கில் கூவ என்பது ஒரு வசைச்சொல். பிறகெப்படி இந்தப் பாடலில் ஆந்தை என்ற பொருளில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லை. பாடலாசிரியர் மதன் கார்க்கியாம். அவருக்குத் தெரியாமலா அந்த வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பார்?! கூகை எப்படியும் இலக்கணப் பிழையோடு கூட கூவயாக முடியாது. ஆனால் இந்தப் பாடலில் பல இடங்களில் ஆந்தை என்ற பொருள் வரும்படி இந்த வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். முன்னெச்சரிக்கையாக பாடலின் துவக்கத்தில் கூகையைப் பற்றிய விளக்கம் வேறு தருகிறார்கள். கூகை எப்படி கூவயாயிற்று என்று மதன் கார்க்கி தான் சொல்ல வேண்டும்.

அட கூகைக்கு வந்த சோதனையே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.