வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!தவெகவும் திமுகவும் ஏன் ஒரே அணியில் வரக்கூடாது? திருமாவளவன்விரைவில் புதிய ஐஆர்சிடிசி இணையதளம்! நச்சென்று நான்கு மாற்றங்கள்!
/

வித்யாபாலன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் ஜோதிகா! ஆர்ஜே அவதாரம் எடுக்கிறாரா?

36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார் போன்ற பெண் மையக் கதாபாத்திரங்கள் உள்ள படங்களில்

News image
Updated On :20 பிப்ரவரி 2018, 2:59 pm IST

36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார் போன்ற பெண் மையக் கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார் ஜோதிகா.

Story image

36 வயதினிலே படத்தில் நடுத்தர வயதுப் இல்லத்தரசியாகத் தோன்றி பெண்களின் ஒட்டுமொத்த கவனத்தைப் பெற்றார் ஜோ. அதன் பின் மகளிர் மட்டும் படத்தில் பத்திரிகையாளராக நடித்து வித்யாசமான கோணத்தில் பெண்களின் பிரச்னைகளை பதிவு செய்தார்.

Story image

நாச்சியாரில் அதிரடியாக போலீஸாக நடித்து திரை ஆர்வலர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றார். இந்நிலையில் ஜோவின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று கோலிவுட் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்க, ஜோதிகா ரேடியோ ஜாக்கியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Story image

 
பாலிவுட்டில் வித்யா பாலன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தும்ஹாரி சுலு என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப் போகிறாராம். இந்த படத்தில் வித்யா பாலன் ஆர் ஜெவாக நடித்திருப்பார். தமிழ் ரசிகர்களுக்காக கதையில் சில மாற்றங்களை உள்ளடக்கி திரைக்கதையை எழுதியிருக்கிறார் இப்படத்தை இயக்கவிருக்கும் ராதா மோகன். ராதா மோகன் இயக்கிய 'மொழி’ ஜோதிகாவின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.