குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

'எங்களை மன்னித்து விடு மது!' கேரளாவில் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞருக்காக பகிரங்க மன்னிப்பு கேட்ட மெகா ஸ்டார்!

பழங்குடியினத்தைச் சேர்ந்த மது என்ற இளைஞர், அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :28 பிப்ரவரி 2018, 1:22 pm IST

பழங்குடியினத்தைச் சேர்ந்த மது என்ற இளைஞர், அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அரிசியைத் திருடியதாகக் கூறி பத்துக்கும் மேற்பட்டோர் மதுவை அடித்துக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்த விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி கண்டனக் குரல்களும் எழுந்தன. கேரளாவை மட்டுமல்ல உலக மக்கள் பலரையும் குற்றவுணர்வுக்குள்ளாக்கியுள்ளது இச்சம்பவம். மனிதம் மரித்துப் போனதற்கான மற்றொரு உதாரணம்தான் இது. கேரள முதல்வர் மற்றும் சமூக ஆர்வலகர்கள் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மலையாள நடிகர் மம்முட்டி இச்சம்பவத்தை தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

'மதுவை ஆதிவாசி என சொல்லாதீர்கள். அவன் என் இளைய தம்பி. அவனை எல்லோருடம் சேர்ந்து கும்பலாக கொன்றுவிட்டீர்கள். மதுவை உங்கள் தம்பியாக, மகனாக கூட நினைக்கவேண்டாம் ஒரு மனிதனாக நினைத்திருந்தாலும் கூட இப்படி செய்திருக்க மாட்டீர்கள். அவனும் நம்மை போல ஒருவன் தானே? பசிக்காக திருடியவனை திருடன் என்று சொல்ல முடியாது. இந்த இருண்ட சமூகத்திலிருந்து நீங்கள் பசியையும் பட்டினியையும் தான் அழிக்க வேண்டும். ரத்தமும் சதையுமாக அதற்கு பலியாகும் மனிதனை அல்ல. அவன் இந்த சமூகத்தில் வாழ வேண்டிய ஒருவன். அவனுக்கு அதற்கான உரிமைகள் உள்ளது. எங்களை மன்னித்து விடு மது’ என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார் மெகா ஸ்டார் மம்முட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.