காற்றில் கலந்துவிட்ட காவியத் தாரகை! நடிகை ஸ்ரீதேவியின் மறக்க முடியாத 5 திரைப்பாடல்கள்!

எண்பதுகளில் நிறைய குடும்பங்களில் ஸ்ரீதேவி என்று மகள்களுக்கு பெயர் வைத்த தகப்பன்மார்களை நாம் அறிவோம்.
காற்றில் கலந்துவிட்ட காவியத் தாரகை! நடிகை ஸ்ரீதேவியின் மறக்க முடியாத 5 திரைப்பாடல்கள்!
Updated on
1 min read

எண்பதுகளில் நிறைய குடும்பங்களில் ஸ்ரீதேவி என்று மகள்களுக்கு பெயர் வைத்த தகப்பன்மார்களை நாம் அறிவோம். தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் இந்தியத் திரையையே ஆளுமை செய்தவர் நடிகை ஸ்ரீதேவி. கள்ளமில்லாத சிரிப்பும், ஆர்ப்பரிக்காத இயல்பான நடிப்பும் சினிமா என்பதையும் மீறி ரசிகர்களின் மனத்தில் பதிந்துவிட்ட ஓர் முகம்.

ஸ்ரீதேவியின் பூத உடல் இந்த மண்ணைவிட்டு அகன்றாலும், அவர் விட்டுச் சென்ற அவரது பலவிதமான முகபாவங்கள் ரசிகர்களின் மனத்தில் நீங்காமல் நிலைத்திருக்கும். அவர் ஆயிரம் பாடல்களுக்கு மேல் கூட நடித்திருக்கலாம். ஆனால் சில பாடல்கள் நமக்கே நமக்கு என பிரத்யேகமானவை. அந்தப் பாடல் அந்தக் காலகட்டத்தை நம் கண்முன் நிறுத்தக் கூடியவை. அவ்வகையில் என்னால் ஒருபோதும் மறக்க முடியாத நான் மீண்டும் மீண்டும் கேட்கும் பாடல்கள் இவை....

ஓ...பிரியா.....ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே... அனுமான் உன்னைக் காண...(ஜேசுதாஸின் குரலில், ரஜினியின் நடிப்பில் இந்தப் பாடல் அதே படத்தில் சூப்பர் ஹிட்டான மற்ற பாடல்களுக்கு மாற்று குறையாதது. ஸ்ரீதேவி) 

பூங்காற்று புதிரானது...புது வாழ்வு சதிராடுது.. கண்ணே கலைமானே பாடலில் வரும் ஒரு வரியில் ஏனோ தெய்வம் சதி செய்தது என்ற வரியை நாம் அடிக்கடி நினைப்பதுண்டு. (இப்போதும் கூட....)

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது....(இசைகின்றது...இன்னும்....)

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது....என்றென்றும் மறக்க முடியாத காட்சிகள் 

வசந்த கால நதி அலைகள்...வைரமணி நீர் அலைகள்....(அலை அலையால் நினைவு..) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com