தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

‘புதிய முகம்’ ஏ.ஆ.ர். ரஹ்மானின் முதல் படமாக இருந்திருக்கும்: சுரேஷ் மேனன் ஆதங்கம்!

புதிய முகம் குறித்து ரோஜா படத்துக்கு வெகுகாலம் முன்பே விவாதித்தோம்... 

News image
Updated On :23 ஜனவரி 2018, 10:32 am

எழில்

புதிய முகம் படத்தில் பெரிய நடிகர்கள் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தால் அதுவே இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் முதல் படமாக இருந்திருக்கும் என இயக்குநரும் நடிகருமான சுரேஷ் மேனன் கூறியுள்ளார்.

புதிய முகம் 2 படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் சுரேஷ் மேனன், 1993-ல் வெளியான புதுமுகம் படம் குறித்து ஃபேஸ்புக்கில் கூறியதாவது:

புதிய முகம் 2 பட வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இன்றைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இன்னும் வேகமாகச் செல்லும் படமாக அமைய முயற்சி செய்வேன். ஒரே உயரம் கொண்ட இரு கதாநாயகர்கள் நடிப்பார்கள். (புதிய முகம் படத்தில் நடித்த வினீத்தும் சுரேஷ் மேனனும் வெவ்வேறு உயரம் கொண்டவர்கள்). படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து இன்னும் முடிவாகவில்லை.

1993-ல் வெளியான புதிய முகம் குறித்து சில விஷயங்கள். 

ஆரம்பத் தடங்கல்களுக்குப் பிறகு படம் நன்றாக வந்தது. முன்னணி கதாநாயகர்கள் சிலரிடம் நடிக்கக் கேட்டேன். அவர்கள் நடிக்க மறுத்த பிறகே நான் நடித்தேன். 

அவர்கள் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தால் புதிய முகம் படம் ஏ.ஆர். ரஹ்மானின் முதல் படமாக இருந்திருக்கும். ஏனெனில் புதிய முகம் குறித்து ரோஜா படத்துக்கு வெகுகாலம் முன்பே விவாதித்தோம். 

கலை இயக்குநர் சாபு சிரிலின் முதல் படம் அதுதான் என நினைக்கிறேன்.

ஒளிப்பதிவாளர் முத்து கணேஷின் முதல் படம்.

Story image

பாடல்கள் - வைரமுத்து, சண்டைப்பயிற்சி - விக்ரம் தர்மா. அரவிந்த் சாமி எனக்காக டப்பிங் செய்தார். வினீத்துக்கு விக்ரம் குரல் கொடுத்தார். ரகுவரன் சிறிய வேடத்தில் நடித்தார். 1983 கலவரத்துக்குப் பிறகு இலங்கையில் முழு படப்பிடிப்பும் நடைபெற்ற படம். நல்ல நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தானாக அமைந்தார்கள். நான் அதிர்ஷ்டம் செய்தவன். பெருமைப்படுகிறேன் என்று எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.