டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் மரணம்!

2011-ம் ஆண்டு வெளியான ஆடுபுலி என்ற படத்தில் கடைசியாக நடித்தார் ரவிச்சந்திரன்

News image
Updated On :15 மே 2018, 12:56 pm IST

தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகர் ரவிச்சந்திரன். காதலிக்க நேரமில்லை படத்தில் முதன் முதலில் நடிக்கத் தொடங்கி, பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர். அவருக்கு விமலா, ஷீலா என இரு மனைவியர் இருந்தனர். ஷீலா புகழ்ப்பெற்ற மலையாள நடிகை என்பது அனைவரும் அறிந்ததே. ரவிச்சந்திரனுக்கு ஹம்சவர்தன், ஜார்ஜ் விஷ்ணு, பாலாஜி ஆகிய மகன்களும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர். 

Story image

2011-ம் ஆண்டு வெளியான ஆடுபுலி என்ற படத்தில் கடைசியாக நடித்தார் ரவி சந்திரன். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்ட அவர், தனது 69-ம் வயதில் காலமானார்.

Story image

தற்போது 50 வயதான அவரது இளைய மகன் பாலாஜி சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பலனின்றி நேற்று (மே 13) காலை உயிர் நீத்தார். 

Story image

ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா ரவிச்சந்திரன், பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம், கருப்பன் போன்ற படங்களில் நடித்தவர். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். பெரியப்பாவின் மரணம், தான்யா உள்ளிட்ட அவர்களது குடும்பத்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையை சேர்ந்தவர்கள் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.