தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ஆதரவின்றித் தவிக்கும் மூத்த நடிகர்கள்: நடிகர் கார்த்தி கவலை!

60 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள், அவர்களுடைய குழந்தைகளால் கைவிடப்பட்ட நிலையில் ஆதரவின்றி...

News image
Updated On :23 ஜூன் 2018, 2:10 pm IST

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் - கடைக்குட்டி சிங்கம். இதில் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி.

இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை நடிகரும் கார்த்தியின் சகோதரருமான சூர்யா தயாரித்துள்ளார். சத்யராஜ், சூரி, சயீஷா, ப்ரியா பவானிசங்கர் போன்றோர் நடித்துள்ளார்கள். தெலுங்கிலும் வெளியாகும் இந்தப் படத்துக்கு சின்னபாபு என்று பெயரிடப்படுள்ளது. 

கடைக்குட்டி சிங்கம் படம் குறித்து நடிகர் கார்த்தி கூறியதாவது:

இந்தப் படம் வலியுறுத்தும் விஷயம் என் மனத்துக்கு மிகவும் நெருக்கமானது. இந்தியக் கூட்டுக் குடும்பத்தின் அருமையை இந்தப் படம் விளக்குகிறது. என் சகோதரர் சூர்யா தயாரித்துள்ளார்.

கூட்டுக் குடும்பத்தில் வாழ்வதால் கிடைக்கும் சந்தோஷத்தை நகரங்களில் வாழும் நாம் இழந்து வருகிறோம். இது மிகப்பெரிய நஷ்டம். கூட்டுக் குடும்பத்தின் மகத்துவம் நமக்குத் தெரிவதில்லை. 

நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். 60 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள், அவர்களுடைய குழந்தைகளால் கைவிடப்பட்ட நிலையில் ஆதரவின்றி மனைவியுடன் வசித்து வருகிறார்கள். நடிகர் சங்கம் அளிக்கும் ஓய்வுத்தொகைதான் உதவுகிறது. இது பயமுறுத்தும் சூழலாக உள்ளது. 

நான் கூட்டுக்குடும்பத்திலிருந்து வருகிறேன். அதன் மகத்துவம் எனக்குத் தெரியும். என் குடும்பம் எந்தளவுக்கு எனக்கு முக்கியம் என்றும் தெரியும். ஆனால் இந்தப் படத்தில் நடிக்கும்போது இளம் நடிகர்கள் சிலர், பாசக்காட்சிகளில் நாங்கள் ஏன் உணர்வுபூர்வமாகிறோம் என்று வியக்கிறார்கள். அவர்கள் தனிக்குடித்தனத்தில் வசிக்கிறார்கள். கூட்டுக்குடும்பம் என்கிற அமைப்பிலிருந்து முற்றிலும் விலகிவிட்டார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.