காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

‘ஹாட்ரிக்’ ஜெயம் ரவி: வசூல் வேட்டை நடத்தும் கோமாளி!

ஏற்கெனவே வெளியான நேர்கொண்ட பார்வை படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற நிலையில் அடுத்த வாரம் வெளியான கோமாளி படமும் ஹிட்...

Published On :

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோமாளி. ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியானது.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த காட்சியால் படத்தின் டிரெய்லர் அதிகக் கவனத்துக்கு ஆளானது. இந்நிலையில் கோமாளி படத்துக்கு இதுவரை நல்ல வசூல் கிடைத்துள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள், நிர்வாகிகள் பலரும், வேறெந்த ஜெயம் ரவி படமும் ஆரம்ப நாள்களில் இந்தளவுக்கு வசூலித்ததில்லை, காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாகச் செல்கின்றன என்று சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதனால் டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி என ஹாட்ரிக் வெற்றிகளை ஜெயம் ரவி அடைந்துள்ளார் என அவருக்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. 

நேற்று வரை தமிழ்நாட்டில் கோமாளி படத்துக்குக் கிட்டத்தட்ட ரூ. 18 கோடி வசூல் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. முதல் வார இறுதியில் சென்னையில் மட்டும் ரூ. 1.86 கோடி வசூல் கிடைத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆகஸ்ட் 15 முதல் 18 வரை நேர்கொண்ட பார்வை படத்தை விடவும் அதிக வசூலைக் கண்டுள்ளது கோமாளி படம். ஏற்கெனவே வெளியான நேர்கொண்ட பார்வை படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற நிலையில் அடுத்த வாரம் வெளியான கோமாளி படமும் ஹிட் ஆனதால் தமிழ்நாட்டுத் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.