ஐபிஎல் 2019 இறுதி ஆட்டத்தில் சென்னையை 1 ரன் வித்தியாசத்தில் வென்று நான்காவது முறையாக மும்பை சாம்பியன் பட்டம் வென்றது.
ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பை-சென்னை அணிகள் இறுதி ஆட்டத்தில் மோதின.
முதலில் ஆடிய மும்பை 149/8 ரன்களை எடுத்தது. (பொல்லார்ட் 41), பின்னர் ஆடிய சென்னை 148/7 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. அதிரடி வீரர் ஷேன் வாட்ஸன் அபாரமாக ஆடி 80 ரன்களை விளாசியது வீணானது.
1 பந்தில் 2 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் சென்னையின் தாகுரை கடைசி பந்தில் எல்பிடபிள்யு முறையில் அவுட்டாக்கி மும்பையை வெற்றி பெறச் செய்தார் லஸித் மலிங்கா.
இந்த வெற்றி மூலம் 4-ஆவது முறையாக பட்டம் வென்றது மும்பை.
முதலிடம் பெற்ற அந்த அணிக்கு ரூ.20 கோடியும், இரண்டாம் இடம் பெற்ற சென்னை அணிக்கு ரூ.12.5 கோடியும், தில்லி, ஹைதரபாத் அணிகளுக்கு தலா ரூ.8.75 கோடியும் ரொக்கப்பரிசாக அளிக்கப்பட்டன.