

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யா தம்பதியர் இரண்டாம் ஆண்டு திருமண வாழ்க்கையை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) கொண்டாடினர்.
மேலும் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், சமந்தா தனது கணவருக்காக ஒரு இதயப்பூர்வமான அன்பான பதிவை தனது இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ளார்.
திருமண புகைப்படத்தைப் பகிர்ந்து, சமந்தா அதில் எழுதியுள்ளது: "வலுவாக, மேலும் வலுவாகத் தொடரும் உறவிது .. இரண்டு ஆண்டு நிறைவு இன்று ஆனால் இது பத்து ஆண்டின் கதை’ என்று பதிவிட்டுள்ளார்.
அதாவது இருவரும் காதலிக்கத் தொடங்கி, லிவ் இன் உறவில் இருந்து பின்னர் திருமணம் முடித்த வரையில் இந்தப் பயணம் அவர்களுக்கு இனியதாக இருக்கிறது என்று பொருள்படும்படி சாம் அந்தப் பதிவை எழுதியுள்ளார்.
மேலும் சமந்தா ஒரு விடியோவையும் வெளியிட்டுள்ளார், அதில் இருவரும் ஒரு பெப்பி பாடலுக்கு நடனமாடுவதைக் காணலாம்.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'ஏ மாயா செஸாவே’ என்ற படத்தில்தான் சமந்தாவும் சைதன்யாவும் முதன்முதலாக ஒருவரை ஒருவர் சந்தித்தனர்.
பல ஆண்டுகளாக இந்த இணையர் டேட்டிங் செய்த பின்னர், கடந்த 2017-இல் கோவாவில் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.