தேர்தல்: காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து!

மக்களவைப் பொதுத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல்: காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து!
Published on
Updated on
1 min read

மக்களவைப் பொதுத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 18) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தியா முழுக்க ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதால் தமிழ்நாட்டிலுள்ள திரையரங்குகளில் காலை மற்றும் மதியக் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில், இன்று இரவுக்காட்சி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று அனைத்துக் காட்சிகளையும் ரத்து செய்யவேண்டும் என திரையரங்குகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com