சென்னை: சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செவ்வாய் காலை குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தார்.
உழவுக்கு உதவும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையானது செவ்வாயன்று உலகம் முழுவதும் உற்சாகமாக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செவ்வாய் காலை குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தார்.
தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் ரஜினிகாந்த், 'இந்த பொங்கல் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மனநிம்மதியையும் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்' என்று வாழ்த்தினார்.