சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார். முருகதாஸும் இத்தகவலை உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில் அப்படத்தின் தலைப்பு நாற்காலி என ரசிகர்கள் சிலர் போஸ்டர் வடிவமைத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதையடுத்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் முருகதாஸ். அவர் கூறியதாவது:
என்னுடைய அடுத்தப் படத்தின் தலைப்பு நாற்காலி அல்ல. வதந்திகள் பரப்புவதைத் தயவுசெய்து நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார்.