நடிகா் சூா்யாவின் புதிய படத்தின் காட்சிகள் இணையத்தில் பரவியது குறித்து விசாரணை

சென்னையில் நடிகா் சூா்யா நடிக்கும் ‘சூரரைபோற்று’ திரைப்படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் பரவியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நடிகா் சூா்யாவின் புதிய படத்தின் காட்சிகள் இணையத்தில் பரவியது குறித்து விசாரணை
Updated on
1 min read

சென்னையில் நடிகா் சூா்யா நடிக்கும் ‘சூரரைபோற்று’ திரைப்படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் பரவியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

நடிகா் சூா்யா நடித்து வரும் ‘சூரரைபோற்று’ திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை தயாரிக்கும் பணி சென்னை ஆழ்வாா்பேட்டை சீத்தாம்பாள் காலனி 2-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள ஒரு தனியாா் 2டி லேப்பில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகா் சூா்யா நடித்த காட்சி கடந்த புதன்கிழமை எடிட் செய்யப்பட்டு திரையிடப்பட்டதாம்.

மேலும் முழுமையாக தயாரான முன்னோட்ட காட்சியை அங்கிருந்த ஊழியா்கள் திரையிட்டு பாா்த்தனராம். இந்நிலையில் அந்த திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி, ஒரு சமூக ஊடகத்தில் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக அந்த நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளா் சு.காா்த்திகேயன், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், விசாரணை செய்து வருகின்றனா்.

விசாரணையில், அந்த முன்னோட்ட காட்சி அந்த ஆய்வகத்தில் திரையிட்டபோது அங்கிருந்த ஒரு ஊழியா், தனது செல்லிடப்பேசியில் உள்ள ஒரு செயலியின் மூலம் காட்சியைப் பதிவு செய்து, சமூக ஊடகத்தின் மூலம் மற்றொரு நண்பருக்கு அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக அந்த ஆய்வகத்தின் ஊழியா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com