கனடாவில் உள்ள மகனை எண்ணி நடிகர் விஜய் கவலை!

கனடாவில் உள்ள தனது மகனை எண்ணி நடிகர் விஜய் கவலையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவில் உள்ள மகனை எண்ணி நடிகர் விஜய் கவலை!
Updated on
1 min read

உலகம் முழுக்க கரோனாவின் அச்சுறுத்தலால் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் சூழலில் கனடாவில் உள்ள தனது மகனை எண்ணி நடிகர் விஜய் கவலையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 10,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திரைப்பட மேற்படிப்பு தொடர்பாக கனடாவில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார் நடிகர் விஜய் மகன் சஞ்சய். இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 3 வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் விமான சேவைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சஞ்சயால் உடனடியாக இந்தியாவுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தச் சமயத்தில் கனடாவில் மாட்டிக்கொண்டுள்ள மகனை எண்ணி நடிகர் விஜய் கவலையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com