முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

ஆஸ்கர் அமைப்பில் உறுப்பினர்களாகப் பங்கேற்கும் ஹிருத்திக் ரோஷன், ஆலியா பட்!

ஆஸ்கர் அமைப்பில் இந்த வருடம் புதிதாக 819 பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

News image
Updated On :1 ஜூலை 2020, 5:04 pm IST

ஆஸ்கர் அமைப்பில் இந்த வருடம் புதிதாக 819 பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

ஆஸ்கர் அமைப்பில் 9000-க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளார்கள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர் இதில் இடம்பெற்றுள்ளார்கள். 

இந்நிலையில் பாலிவுட் கலைஞர்கள் ஹிருத்திக் ரோஷன், ஆலியா பட் மற்றும் ஆவணப்படக் கலைஞர்கள் ஷெர்லி ஆபிரஹாம், அமித் மதேஷியா உள்ளிட்ட 819 பேரை இந்த வருடம் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளது ஆஸ்கர் அமைப்பு. தமிழகத்தின் கியூப் நிறுவனத்தைச் சேர்ந்த வி. செந்தில் குமாரும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 28 அன்று நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், உலகம் முழுக்க கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவுவதால் ஆஸ்கர் விருது வழங்கும் விழா இரு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 

2021 பிப்ரவரி 28-க்குப் பதிலாக ஏப்ரல் 25 அன்று ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுக்கு விண்ணபிக்கும் படங்களுக்கான விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது ஆஸ்கர் அமைப்பு. அதன்படி அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஒடிடி தளங்களில் நேரடியாக வெளியாகும் படங்களும் ஆஸ்கர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்கிற புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் இந்த வருடம் வெளியான படங்களுக்கு மட்டும் இது பொருந்தும். இந்த மாற்றம் தற்காலிகமானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.