இன்ஸ்டகிராம் தளத்தில் அன்பைப் பொழியும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்.
பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளரும் செய்தி வாசிப்பாளருமான அனிதா சம்பத், இன்ஸ்டகிராம் தளத்தில் கூறியிருப்பதாவது:
இரண்டு வருடங்களாகப் படவரியில் (இன்ஸ்டா) அன்பைப் பொழியும் அத்தனை அன்பாளர்களுக்கும் கோடி நன்றிகள்.
சும்மா பின்தொடர்வோம் என்று பின்தொடர்பவர்களை விட நேரில் பார்க்கவில்லையென்றாலும் உண்மையாகவே அக்காவாகவோ தங்கையாகவோ நண்பியாகவோ நேசித்து பின்தொடர்பவர்கள் தான் அதிகமா இருக்கீங்க. எந்த அளவுக்கு அன்பு என்றால் அறக்கட்டளைகளுக்கு என் சார்பாக நிதியுதவி செய்யும் அளவுக்கு.
மனக் கஷ்டம் எல்லாம் எல்லோரையும் போல எனக்கும் வரும். தீவிர மன அழுத்தத்துக்கு எல்லாம் போய்விடுவேன் சிலசமயம். அப்போதெல்லாம் என் மனத்துக்கு நான் போட்டுக்கொள்ளும் மருந்து என் இன்ஸ்டகிராம் இன்பாக்ஸ் தான், சத்தியமாக.
எல்லோருக்கும் பதில் அனுப்ப முடியவில்லை என்றாலும் எல்லோருடைய மெசேஜ்களையும் படித்தாலே இவ்வளவு பாசத்துடன் இத்தனை பேர் இருக்கிறார்களே என நினைத்து என்னைக் கடுப்படிக்கிற விஷயங்களை அந்த நேரத்துக்காவது மறந்து விடுவேன்.
அக்னி வெயிலில் அலைபவனுக்கு ஆலமரக் குளிர் நிழல் போல தான் என் இன்ஸ்டா நண்பர்கள் எப்போதும் எனக்கு.
கல்யாணம் செய்துகொண்டால் உன்னை மதிக்க மாட்டார்கள் என்னைக் கிண்டல் செய்யாதவர்களே இல்லை. ஆனால் அதற்கு நேர்எதிராக நான் கல்யாணம் செய்த, முன்பின் தெரியாத அந்தப் பையனுக்கும் சேர்த்து அளவுகடந்த அன்பைத் தெளித்தது தான் உங்கள் அன்பின் உச்சக்கட்டம்.
எப்போதும் கூடவே இருங்க. இதே போல ஆதரவு அளியுங்கள். பதில் அனுப்பவில்லை என்று கோபித்துக்கொள்ள வேண்டாம் என்று உருக்கமாக எழுதியுள்ளார்.